தற்போதெல்லாம் "இட்லி" அடைமொழிக்கு பொருந்தும் வகையில் இருக்கும் நடிகை குஷ்பு சுந்தர் சில அதிரடியான அறிக்கைகளையும் கருத்துக்களையும் பதிவுசெய்து வருவதனால் பப்ளிசிட்டி பெருந்தகை ஆகிறார் . அவ்வண்ணமே இவர் அன்மையில் ஊடகங்களில் வெளியிட்டுள்ள இரு வேரு கருத்து பகிர்தல்கள் தாம் இப்போதய சுடச்சுட செய்திகளாக இந்திய ஊடகங்களில் உலா வருகின்றது.
சமீபத்தில் பி.கே என்ற இந்தி படத்தில் நடித்துள்ள அமீர்கான், அந்த படத்தின் பப்ளிசிட்டியை கருத்தில் கொண்டு நிர்வாண போஸ் கொடுத்திருந்தார். ஒரு முன்னணி நடிகரே இப்படி நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்ததால் இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதனால் அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
ஆனால், விசாரணைக்கு வந்த அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். அதோடு, சினிமா என்பது ஒரு கலை. பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது. அதனால் அதற்கு தடை விதித்தால் படத்தை தயாரித்திருப்பவர் பாதிக்கப்படுவார். இந்த படத்தை பார்க்க விருப்பம் இல்லையென்றால் அதை பொதுமக்களே நிராகரிக்கட்டும். மேலும், இதில் தேவையில்லாமல் மதத்தையும் புகுத்த வேண்டாம் என்றும் சொல்லி அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
இதை திரையுலகைச்சேர்ந்த பலரும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில், நடிகை குஷ்புவும் அதை வரவேற்றுள்ளார். கலையை மதித்து சினிமாத்துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார் என தெரிகின்றது.
அவ்வாறே, திரைப்படங்களில் நடிகர்கள் சிகெரட் குடித்தால் என்ன தவறு? என்று நடிகை குஷ்பு கருத்தினை தெரிவித்துள்ளார் என அறியப்படுகின்றது .
சமீபத்தில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி, மற்றும் ஜிகிர்தண்டா படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற சமூக சீர்கேடான காட்சிகள் அதிகம் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியது
மேலும் 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்கு பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அப்படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதேபோல ஆமிர்கான் 'பி.கே' படத்தின் நிர்வாண போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் அப்படம் வெளியிட தடை விதிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:
""வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'பி.கே' படங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை வழக்குகளை தள்ளுபடி செய்து, ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Love to see #HC in chennai n #SC speak in support of films against the PILs filed against #VIP n #PK..thank you very much.#fringegroupbyebye
— khushbusundar (@khushsundar) August 14, 2014
ஒரு நடிகர் நல்லது செய்யும்போது, அதனை யாருமே பின்பற்றுவது இல்லை. ஒரு நடிகர், ஏழைகளுக்கு உதவுவது, நன்கொடைகளை வழங்குவது, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உள்ளிட்டவற்றை செய்கிறார். அதையெல்லாம் யாரும் பின்பற்றாதபோது, சிகரெட் பிடிக்கும் விஷயத்தை மட்டும் கருத்தில் கொள்வது எந்த வகையில் சரி?" என்று கருத்துகளை பதிந்துள்ளார்.
Wow..wen a hero does good u dont copy him..wen he donates,helps d poor,participates in events 2 help d society..how cme u c only cigarettes?
— khushbusundar (@khushsundar) August 14, 2014
இவ்வாறு தமது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி ஏதாவது சர்ச்சைமீகு டிவிட்டுக்களை அனேகரின் வெறுப்பையும் வருகின்றமை குறிப்பிடப்பட வேண்டியதே .
Some dogs never stop barking..best is to let them continue as unfortunately they do not possess 6th sense like we humans.. :)
— khushbusundar (@khushsundar) August 14, 2014
ஆக, திரையில் தோன்றி நடிப்பினை சிறப்பாக வெளிக்காட்டி பலராலும் பேசப்பட்ட இவர் இன்னும், இன்றும் பேசப்படுவது ஆச்சர்யப்பட வேண்டிய ஒன்று அல்லவே!.
0 comments:
Post a Comment