அடக்குமுறை ஆணாதிக்கமா? தலைவிரித்தாடும் பெண்ணியமா?
யுவதி ஒருவர் வாலிபரை அறைந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கடந்த வாரம் இலங்கை வாரிய பொல பிரதேசத்தில் பேருந்து நிலையத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றது. இதன் காணொளியை தனியார் தொலைகாட்சி ஒன்று அன்றைய தினம் இரவு செய்தியறிக்கையின் போது காட்சிபடுத்தியது.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்த்தால் , 21 வயதுடைய யுவதி திலினி அமல்கா மற்றும் அவரதுநண்பி இருவரும் வாரியபொல பிரதேச பஸ் தரிப்பிடத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று திரும்பிய வேளையில் வாசலில் நின்றுகொண்டிருந்த இளைஞர் சந்திர குமார என்பவர் திலினியை பார்த்து ஏதோ கூற கோபம் கொண்ட திலினி அவரது கண்ணத்தில்அறைந்த்துள்ளார்.
சம்பவத்தின் போது அருகில் நின்று கொண்டிருந்த ஜயசிங்க என்பவரிடம் விசாரிக்க அவரோ, அந்த பெண் தம்மை காவல் துறையை சேர்ந்தவர் என்று குறிபிட்டதாகவும் , இடை விடாமல் அந்த இளைஞரை 45 நிமிடங்களுக்கு மீள் அறைந்ததாகவும் தடுக்க சென்ற ஜெயசிங்கவையும் கோபத்தோடு ஏசியதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான காணொளி தொலைக்காட்சி ஊடகங்கள் இணையம் என்பவற்றில் மிக வேகமாக பரவியதுடன் அது தொடர்பில் பல முரண்பாடான கருத்து பரிமாறல்களும் இடம்பெற்றன
இன்று குறித்த பெண் திலினி வாரியபொல காவல்துறையினரிடம் தமது சட்டத்தரணியுடன் சரணடைந்த வேளையில் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது .
" முறைகேடான வசனங்களில் என்னை திட்டியதால் நான் குறித்த இளைஞரை தாக்கினேன். அவருக்கும் எனக்கும் எதுவித முன் விரோதமும் இல்லை, பஸ் தரிப்பிடத்தில்பொதுமக்கள் முன்னிலையில் எனக்கு ஏற்பட்ட அநீதியை அனைவரும் அமைதியாக பார்துகொண்டிருந்தனரே தவிர எனக்கு உதவ யாரும் முன் வரவில்லை" என தம் பக்கத்து நியாயத்தினை திலினி காவல் துறையினரிடம் தெரிவித்தாக அறியப்படுகின்றது.
வாரியப்பொலயை வசிப்பிடமாக கொண்ட R.C.சந்திரகுமார தான் சம்பவத்தில் சிக்கிக்கொண்டவர், இது தொடர்பில் அவரோடு பேசிய போது அவர் தினசரி கூலிவேலை செய்து பிழைப்பவர் என்றும், அன்றும் தான் ஒரு வேலையை எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நேரம், இப்பெண், தனது நண்பியுடன் பஸ் தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார் என்றும் கூறியவர்,
"அப்பெண் மிகவும் இறுக்கமான ஆடை அணிந்திருந்தார்.. நான் அவரிடம், ' மிஸ் இந்த ஆடை உங்களுக்கு பொருந்தவில்லை, நல்லா இல்லை' என்றேன். உடனே அப்பெண் அது உனக்கு தேவையில்லாத விடயம் என்று கூறிவிட்டு வேகமாக பஸ்சில் ஏறினார், நான் பஸ் தரிப்பிடத்தில் நிற்பதைக்கண்டு மீண்டும் இறங்கி வந்து, எனக்கு என்னைப்பற்றி, என் ஆடையை பற்றி சொல்ல நீ யார் என்று கேட்டு, தொடர்ந்து திட்டிக்கொண்டு, கன்னத்தில் அறைய ஆரம்பித்தார். நான் மன்னிப்பு கேட்டும் அவர் தொடர்ந்து தாக்கினார். பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைவது தவறான ஒரு செயல் என்பதால் நான் தலையை குனிந்து நின்றேன்"என்றார்.
இந்த தகவல்கள் வெளியான பின் அந்த ஆண் தொடர்பில் ஒரு பரிதாப உணர்வு ஏற்பட, அந்த பெண்ணை அனைவரும் ஒரு விதமான கோப உணர்வோடு பார்க்க தொடங்கிவிட்டனர்.
இத்தனை பரபரப்புக்கும் காரணமான சர்ச்சைக்குரிய அந்த பெண் இது பற்றி கூறுகையில், "அங்கு நடந்த சம்பவம் என்னவென்று நேரில் கண்டவர்களுக்கு தான் தெரியும்,
நான் இணையத்தில் வீடியோ பதிவுகள் மற்றும் செய்திகளைப் பார்த்தேன், எனக்கு மிகவும் கவலையாக இருந்தது, அதிகமான இளைஞர்கள் என் மேல் கோபமாக உள்ளனர், அவர்கள் கோபப் படுவதற்கு இங்கு ஒன்றும் இல்லை" என கூறினார்.
இப்பெண் சரமாரியாக தாக்கும் போது எதுவுமே பேசாமல் அந்த நபர் நிற்பதைப் பார்த்தால், அந்த இளைஞன் தரப்பிலும் ஏதோ தவறுள்ளது போல் தான் இருக்கிறது எனவும், பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
யுவதி ஒருவர் வாலிபரை அறைந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கடந்த வாரம் இலங்கை வாரிய பொல பிரதேசத்தில் பேருந்து நிலையத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றது. இதன் காணொளியை தனியார் தொலைகாட்சி ஒன்று அன்றைய தினம் இரவு செய்தியறிக்கையின் போது காட்சிபடுத்தியது.
உண்மையில் நடந்தது என்ன வென்று பார்த்தால் , 21 வயதுடைய யுவதி திலினி அமல்கா மற்றும் அவரதுநண்பி இருவரும் வாரியபொல பிரதேச பஸ் தரிப்பிடத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று திரும்பிய வேளையில் வாசலில் நின்றுகொண்டிருந்த இளைஞர் சந்திர குமார என்பவர் திலினியை பார்த்து ஏதோ கூற கோபம் கொண்ட திலினி அவரது கண்ணத்தில்அறைந்த்துள்ளார்.
சம்பவத்தின் போது அருகில் நின்று கொண்டிருந்த ஜயசிங்க என்பவரிடம் விசாரிக்க அவரோ, அந்த பெண் தம்மை காவல் துறையை சேர்ந்தவர் என்று குறிபிட்டதாகவும் , இடை விடாமல் அந்த இளைஞரை 45 நிமிடங்களுக்கு மீள் அறைந்ததாகவும் தடுக்க சென்ற ஜெயசிங்கவையும் கோபத்தோடு ஏசியதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பான காணொளி தொலைக்காட்சி ஊடகங்கள் இணையம் என்பவற்றில் மிக வேகமாக பரவியதுடன் அது தொடர்பில் பல முரண்பாடான கருத்து பரிமாறல்களும் இடம்பெற்றன
இன்று குறித்த பெண் திலினி வாரியபொல காவல்துறையினரிடம் தமது சட்டத்தரணியுடன் சரணடைந்த வேளையில் கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது .
" முறைகேடான வசனங்களில் என்னை திட்டியதால் நான் குறித்த இளைஞரை தாக்கினேன். அவருக்கும் எனக்கும் எதுவித முன் விரோதமும் இல்லை, பஸ் தரிப்பிடத்தில்பொதுமக்கள் முன்னிலையில் எனக்கு ஏற்பட்ட அநீதியை அனைவரும் அமைதியாக பார்துகொண்டிருந்தனரே தவிர எனக்கு உதவ யாரும் முன் வரவில்லை" என தம் பக்கத்து நியாயத்தினை திலினி காவல் துறையினரிடம் தெரிவித்தாக அறியப்படுகின்றது.
வாரியப்பொலயை வசிப்பிடமாக கொண்ட R.C.சந்திரகுமார தான் சம்பவத்தில் சிக்கிக்கொண்டவர், இது தொடர்பில் அவரோடு பேசிய போது அவர் தினசரி கூலிவேலை செய்து பிழைப்பவர் என்றும், அன்றும் தான் ஒரு வேலையை எதிர்பார்த்து பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நேரம், இப்பெண், தனது நண்பியுடன் பஸ் தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார் என்றும் கூறியவர்,
"அப்பெண் மிகவும் இறுக்கமான ஆடை அணிந்திருந்தார்.. நான் அவரிடம், ' மிஸ் இந்த ஆடை உங்களுக்கு பொருந்தவில்லை, நல்லா இல்லை' என்றேன். உடனே அப்பெண் அது உனக்கு தேவையில்லாத விடயம் என்று கூறிவிட்டு வேகமாக பஸ்சில் ஏறினார், நான் பஸ் தரிப்பிடத்தில் நிற்பதைக்கண்டு மீண்டும் இறங்கி வந்து, எனக்கு என்னைப்பற்றி, என் ஆடையை பற்றி சொல்ல நீ யார் என்று கேட்டு, தொடர்ந்து திட்டிக்கொண்டு, கன்னத்தில் அறைய ஆரம்பித்தார். நான் மன்னிப்பு கேட்டும் அவர் தொடர்ந்து தாக்கினார். பொது இடத்தில் ஒரு பெண்ணை கைநீட்டி அறைவது தவறான ஒரு செயல் என்பதால் நான் தலையை குனிந்து நின்றேன்"என்றார்.
இந்த தகவல்கள் வெளியான பின் அந்த ஆண் தொடர்பில் ஒரு பரிதாப உணர்வு ஏற்பட, அந்த பெண்ணை அனைவரும் ஒரு விதமான கோப உணர்வோடு பார்க்க தொடங்கிவிட்டனர்.
இத்தனை பரபரப்புக்கும் காரணமான சர்ச்சைக்குரிய அந்த பெண் இது பற்றி கூறுகையில், "அங்கு நடந்த சம்பவம் என்னவென்று நேரில் கண்டவர்களுக்கு தான் தெரியும்,
நான் இணையத்தில் வீடியோ பதிவுகள் மற்றும் செய்திகளைப் பார்த்தேன், எனக்கு மிகவும் கவலையாக இருந்தது, அதிகமான இளைஞர்கள் என் மேல் கோபமாக உள்ளனர், அவர்கள் கோபப் படுவதற்கு இங்கு ஒன்றும் இல்லை" என கூறினார்.
இப்பெண் சரமாரியாக தாக்கும் போது எதுவுமே பேசாமல் அந்த நபர் நிற்பதைப் பார்த்தால், அந்த இளைஞன் தரப்பிலும் ஏதோ தவறுள்ளது போல் தான் இருக்கிறது எனவும், பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது ஒரு பெண் தனக்கு எதிரான அபாயங்களின்போது தன்னை தற்காத்துக்கொள்ளும் மனித உரிமைக்கு எதிரான அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல் , இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆணாதிக்கத்தின் உச்ச கட்டம் என்றால் அது மிகையல்ல என ஒரு தரப்பினர் கூறி வரும் அதே வேளை , அந்த பெண்ணின் மீது ஆடவர் ஒருவரை பலருக்கு முன் வைத்து தாக்கியதை கண்டித்து பலரும் கோப கனல்களை வீசி இது தலைவிரித்தாடும் பெண்ணியம் என கூறி இருப்பதுவும் அறியக்கூடியதாகவும் உள்ளது .
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் இரு பக்கமும் சம நியாயங்களும், தவறுகளும் உள்ள நிலையில் பெண்ணியமா ஆனாதிக்கமா என வாதிடுவதை தவிர்த்து உரிய நியாயத்தினை உயரிய பண்போடு எடுத்து இயம்புவது சால சிறந்தது.